காதல் கடிதம்.... பிரியமானவளே!
அன்று ஓர் நாள் ...
உன்னை சந்தித்துகொண்டபோது
கண்கள் மட்டும் எனக்குள் சொல்ல்லிக்கொண்டது - இவள்
என் காதலி என்று......
நானும் உன்னை தொட்டு சென்ற காற்றிடம் ரகசியமாக சொல்லிவிட்டு சென்றேன் - இவள் என் மனைவியாவாள் என்று...!
பிரியமானவளே ...
எப்போதும் உன் உதடுகள் மட்டுமே - சல சலவென
என்னோடு பேசிக்கொள்ளும்.....
இப்போதெல்லாம் உன் விழிகளே அதிகமாக என்னோடு பேசிக்கொள்ள ..
இதழ்கள் மௌனமாகின்றன..!
பிரியமானவளே ....
உன் விழிகளின் கரு மையை கொண்டுவா.....
உன் கால் கொலுசின் சப்தங்களின் நடுவே - உனக்காக
ஓர் காதல் கடிதம் வரையவேண்டும் - என் உயிரினில் !
பிரியமானவளே ....
இதயங்கள் இணைந்துகொள்ள ...
இதழ்கள் பேசிகொண்ட - இன்பமான
அந்த பொழுதுகளில் உன் விழிகளினால் நீ வரைந்த - எனக்கான
கடிதங்களை இன்றும் நான் தேடுகின்றேன்...!
பிரியமானவளே ...
உன்னை கண்ட நாள் முதல் ...
உனக்காக நான் எழுதிய காதல் கடிதங்களுக்காக ...
காதல் - எனக்காக எழுதி தந்த கடிதமே - நீ ....!
என் ஆயுளின் அந்தி வரை பத்திரபடுத்தி வைத்திருக்கின்றேன் !...
April 17, 2011 at 6:44 p.m.
//நானும் உன்னை தொட்டு சென்ற காற்றிடம் ரகசியமாக சொல்லிவிட்டு சென்றேன் - இவள் என் மனைவியாவாள் என்று...!//
வித்தியாசமான சிந்தனை ..வாழ்த்துக்கள் ..:-)