மழை
தூறல்களின் நடுவே ....
நீ வருவாய் என்னை தொடுவாய் என ...
தேடி பார்க்கின்றேன் தொலைவானில் - உன்
வருகைக்காய் வீசப்படுகின்றன சாமரங்கள் .
தவறவிட்ட நிமிடங்களுக்காய் ...
காத்திருக்கையில் காதோரம் அவள் செய்தி சொல்லிசென்றது - காற்று
தூறல்களாய் சிணுங்க ஆரம்பித்தவள் ...
எனக்காய் முழுவதும் தந்துவிட்டு சென்றாள்.
காதல் கற்று தந்த பாடம் - உன்னை நேசிப்பது
நீ சொல்லி தந்த பாடம் - காதலை சுவாசிப்பது...
மெல்ல மெல்ல ஆரம்பித்து அந்தி வரை கூட இருந்து விட்டு ..
எங்கு சென்றாய் ... உன் அடை மழைக்காய் ...
அடம்பிடிக்கின்றேன் தினமும் இன்றுவரை ..
0 Response to "மழை"
Post a Comment